பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தில் செங்கம் தொகுதி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 உயர்நிலைப்பள்ளிகள், 14 மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.