குஜராத்தில் யோகா ரங்கோலி வரைந்து அசத்திய கலைஞர்கள்

உலக யோகா தினத்தையொட்டி 40 அடி நீளம் அளவுக்கு ரங்கோலி வரையப்பட்டுள்ளது.

Update: 2018-06-28 06:54 GMT
குஜராத் மாநிலம் வதோதரா நகரில், உலக யோகா தினத்தையொட்டி 40 அடி நீளம் அளவுக்கு ரங்கோலி வரையப்பட்டுள்ளது. 200 கிலோ வண்ணப்பொடிகளை கொண்டு, பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட 40 வகையான யோகாசனங்கள் ரங்கோலியில் இடம்பெற்றிருந்தன. கமலேஷ் வைஸ் என்ற கலைஞர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் இந்த ரங்கோலியை வரைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் யோகா ரங்கோலியை வியப்புடன் பார்த்து செல்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்