வெளியீட்டு தயாராக உள்ள ப்ரியங்கா சோப்ராவின் சுயசரிதை புத்தகம்

ப்ரியங்கா சோப்ரா எழுதியுள்ள சுயசரிதையான 'அன்ஃபினிஷ்டு' புத்தகம் வெளியீட்டு தயாராக உள்ளது.

Update: 2020-08-13 05:32 GMT
ப்ரியங்கா சோப்ரா எழுதியுள்ள சுயசரிதையான 'அன்ஃபினிஷ்டு' புத்தகம் வெளியீட்டு தயாராக உள்ளது. 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய் நடித்த 'தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, இன்று பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். 38 வயதாகும் ப்ரியங்கா சோரா தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 'அன்ஃபினிஷ்டு என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வந்தார். தற்போது அந்த புத்தகத்தை எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் பதிப்பிக்கப்பட்டு, புத்தகமாக வெளியாகும் என்றும் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்