நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா

நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-08-09 07:51 GMT
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் நடிகை ரியா சுஷாந்த் கைப்பட எழுதியது என கூறி டைரியின் பக்கம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நன்றிகடன் பட்டவர்கள் என்ற தலைப்பில் உள்ள அந்த பக்கத்தில் தாம் வாழ்க்கைக்கு நன்றி கடன் பட்டுள்ளதாகவும் வாழ்வில் லில்லு,பெபு, சார் மற்றும் மேடமுக்கு நன்றி கடன் பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. 
இதில் பெபு என்று குறிப்பிட்டு இருப்பது ரியா எனவும் லில்லு ரியாவின் சகோதர் சோவிக் எனவும் சார் என்பது ரியாவின் தந்தை எனவும் மேடம் அவரின் தாய் எனவும் புட்ஜ் நாய் குட்டி எனவும் ரியா தெரிவித்து உள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் ஒன்றின் படத்தை வெளியிட்டுள்ள ரியா அதுதான் தன்னிடம் உள்ள சுஷாந்த் சிங்கின் சொத்து எனவும் தெரிவித்து உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்