கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார். மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு கிராமத்தில், இளைஞர்களுடன் சேர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் விமல் ஈடுபட்டார். கையில் இயந்திரத்துடன், ஒவ்வொரு தெருவாக சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிருமி நாசினிகளை தெளித்தார். நடிகர் விமலின் இந்த செயலை, கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.