கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்

பட தலைப்பு காரணமாக நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

Update: 2019-06-28 13:15 GMT
பட தலைப்பு காரணமாக நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் படத்தின் தலைப்புக்கு காப்புரிமை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைப்புக்கு எந்த ஒரு காப்புரிமை இல்லாத காரணத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி  உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்