(06/01/2020) - சொர்க்க வாசல்

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
(06/01/2020) - சொர்க்க வாசல்
x
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி. இந்த நன்நாளில் விஷ்ணுவை வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். பரமபத சொர்க்க வாசல் வழியாக பெருமாளை கண்டு தரிசித்தால் வாழ்வில் பிரச்சினை தீரும், வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா பெருமாள் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது. சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிவிக்க அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் காத்திருந்தனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் காத்திருந்த பக்தர்கள், பார்த்தசாரதியை கண்டதும், கோவிந்தா... கோவிந்தா என முழக்கம் எழுப்பி வழிபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்