நியூயார்க்கில் மர்ம நபர் பயங்கர துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் நியூயார்க் நகர சுரங்கப் பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
அமெரிக்காவின் நியூயார்க் நகர சுரங்கப் பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகர சுரங்கப் பாதையில் முகமூடி அணிந்த மர்ம நபர் புகை குண்டுகள் வீசி திடீரென்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். சுரங்கப்பாதை ரயில் புரூக்ளின் நகருக்குள் நுழையும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அதில் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்