தென் ஆப்பிரிக்க வெள்ளப் பெருக்கு- வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்
தென் ஆப்பிரிக்க வெள்ளப் பெருக்கு- வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி
x
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பிராந்தியத்தில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். கிழக்கு லண்டன், ஓ.ஆர். தம்போ நகரங்களில் இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் வெள்ளப் பெருக்கிற்கு பருவநிலை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்