காபூல் விமானநிலையம் வெளியே குண்டுவெடிப்பு; 13 பேர் உயிரிழப்பு - பலர் காயம் என தகவல்

காபூலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
காபூல் விமானநிலையம் வெளியே குண்டுவெடிப்பு; 13 பேர் உயிரிழப்பு - பலர் காயம் என தகவல்
x
காபூலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் வெளியே குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் அமெரிக்க ராணுவத்தினர் ஆவர். இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியே உள்ள நுழைவாயில்களில் அச்சுறுத்தல் இருப்பதால், அமெரிக்கர்கள் விமான நிலையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், அமெரிக்க அரசின் உத்தரவு வரும் வரை யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்