கூட்ட நெரிசல்,துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி

கூட்டநெரிசல் மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக காபூல் விமான நிலையத்தில் இதுவரை 12 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கூட்ட நெரிசல்,துப்பாக்கிச்சூடு - 12 பேர் பலி
x
ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஆயிரக்கணக்கானவர்கள் விமானம் மூலம் வெளிநாடு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் காபூல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கடும் கூட்ட நெரிசலாகவே காணப்படுகிறது. விமான நிலையத்தின் வெளியே தலிபான்களும்,  விமான நிலையத்தின் உள்ளே கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதுவரை காபூல் விமான நிலையத்தில் கூட்டநெரிசல் மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து முறையாக வெளியேற அனுமதி இருப்பவர்கள் மட்டும் விமானநிலையம் செல்லுங்கள் என்றும், யாரையும் நாங்கள் துன்புறுத்த மாட்டோம் எனவும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்