பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு.. புதிய உச்சம் தொட்ட பேஸ்புக் நிறுவன பங்குகள்

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை கடந்துள்ளது.
பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு.. புதிய உச்சம் தொட்ட பேஸ்புக் நிறுவன பங்குகள்
x
பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு நிராகரிப்பு.. புதிய உச்சம் தொட்ட பேஸ்புக் நிறுவன பங்குகள்   

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்கியதன் மூலம் சமுக வலைத்தள துறையில் பேஸ்புக் முற்றுரிமையுடன் செயல்படுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வாஷிங்டன் மாநில நீதிமன்றம், பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்த‌து. இதையடுத்து பங்குசந்தைகளில் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு உயரத் தொடங்கியது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு முதல் முறையாக ஒரு டிரில்லியன் டாலரை எட்டி சாதனை படைத்த‌து.

Next Story

மேலும் செய்திகள்