முக கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை - "தலையிலேயே தாக்கும் கருவி"
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனையளிக்கும் கருவிகளை சாலைகளில் நிறுவ வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஸ் கோயன்கா கூறி உள்ளார்.
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனையளிக்கும் கருவிகளை சாலைகளில் நிறுவ வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஸ் கோயன்கா கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டு உள்ளார். அதில், முக கவசம் அணிந்து செல்பவரை அனுமதிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள கருவி , முக கவசம் அணியாதவரை தலையிலேயே தாக்குகிறது. மேலும், முக கவசம் அணிந்த பின்னரே தடுப்புகளை திறந்து அது அனுமதிக்கிறது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவரும் இந்த வீடியோவை கோயன்கா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
Next Story