உலக நாடுகளை மீண்டும் மிரட்டும் கொரோனா

பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவது, மக்களை அச்சமடையச் செய்து உள்ளது.
உலக நாடுகளை மீண்டும் மிரட்டும் கொரோனா
x
பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவது, மக்களை அச்சமடையச் செய்து உள்ளது.  இந்தியாவில் நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 315 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 684 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து பிரேசிலில், ஒரே நாளில் 90 ஆயிரத்து 973 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 733 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில், 75 ஆயிரத்து 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஒரே நாளில் 873 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல், துருக்கியில், கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 276 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதேபோல், அர்ஜெண்டினாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 198 பேர் உயிரிழந்து உள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்