அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்
x
ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க வீரர்களை திருப்பி அனுப்பகோரி ஷியா பிரிவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் பாக்தாத் சாலைகளில் இறங்கி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஆள் இல்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமனி, மற்றும் ஈராக் துணை ராணுவ தளபதி பலியான நிலையில் ஈராக் அமைச்சரவையில் அமெரிக்க ராணுவ வெளியேற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.           


Next Story

மேலும் செய்திகள்