"வீடுகளில் இருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள்" - தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வேண்டுகோள்
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள இலங்கையில் வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள இலங்கையில் வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா காலத்தில் வரும் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது கூட்டு பொறுப்புடன் நடந்துகொள்வது அனைவரது நல்வாழ்விற்கு அவசியமாகும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story