களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் - டிரம்பை கடுமையாக சாடிய ஜோ பைடன்
வரும் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
வரும் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஐயோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்ஸ் என்ற இடத்தில் ஆதரவு திரட்டிய ஜோ பைடன், அதிபர் டிரம்பின் புத்திக்கூர்மை பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், அதனை டிரம்ப் கையாண்டவிதம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை ஜோ பைடன் வைத்துள்ளார். ஐயோவா மாகாணத்தில் உள்ள 6 வாக்குகளை கடந்த முறை டிரம்ப் தட்டிச்சென்ற நிலையில், இந்தாண்டு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. கடந்த 2008 மற்றும் 2012 அதிபர் தேர்தலில் ஓபாமாவுக்கு ஆதரவாக ஐயோவா இருந்தது. இதுவரை 8 கோடியே 38 லட்சம் பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story