எல்லைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

இந்தியா, சீனா இடையிலான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
x
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா, சீனா இடையிலான பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில், எல்லைப் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் பேசி தீர்வுக்காணுவது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய, சீன எல்லைப் பகுதியில், அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், இருதரப்பு உறவுக்கும் மிகவும் அவசியமானது என இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு உள்ளதாகவும் அதில் இடம் பெற்றுள்ளது.  எல்லைப் பிரச்சனைக்கு தீர்வுக் காணவும், எல்லைப் பகுதியில் அமைதி, நல்லிணக்கத்தை பேணவும், ராணுவ மற்றும் தூதரக  ரீதியிலான பேச்சு வார்த்தைகள் தொடரும் என  சீனாவுடன் நடந்த பேச்சு தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்