"கொரோனா - அவசர நிலை அறிவிக்கப்படும்" - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலக மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இலங்கை கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலக மாளிகையில், கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒரே இடத்தில் தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்க அவசர நிலை அறிவிக்கப்படும் என கூறிய அவர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Next Story