தாய்லாந்தில் கொரோனா வைரஸால் மக்கள் அச்சம் : முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு
தாய்லாந்தில், முக கவசம் தயாரிப்பு பணிகளை அந்நாட்டு அரசு தீவிரபடுத்தியுள்ளது.
தாய்லாந்தில், முக கவசம் தயாரிப்பு பணிகளை அந்நாட்டு அரசு தீவிரபடுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பது, உலகளவில் மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. தாய்லாந்தில் , கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பொதுமக்கள் முக கவசங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கடைகளில் முக கவசங்கள் இல்லை என பதாகை வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story