ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி கைது

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி கைது
x
ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பேசி வந்த அவரை அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் கைது செய்தது.  ஆனால் கைது செய்யப்பட்ட முப்தியை காரில் ஏற்ற முடியவில்லை. 250 கிலோ உடல் எடை கொண்ட அவரை காருக்குள் ஏற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில் லாரி ஒன்றில் அவரை ஏற்றி கொண்டு சென்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு விசுவாசமுடன் செயல்படாத இஸ்லாமிய மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளை முப்தி அபு அப்துல் பாரி பிறப்பித்து வந்ததாக ஈராக் போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்