தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை - பின்லாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு

பின்லாந்தில் தொழிலாளர்கள் வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் சன்னா மரீன் வெளியிட்டுள்ளார்
தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை - பின்லாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு
x
உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சன்னா மரீன், பதவி ஏற்ற நாளில் இருந்தே நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும், வாரத்திற்கு 3 நாள் விடுமுறை  என்று தெரிவித்துள்ளார். வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தை தங்கள் குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் செலவிட முடியும் என்பதால் பணி நேரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவதாக சன்னா கூறியுள்ளார். விரைவில் அமலாகும் இந்த திட்டத்திற்கு பின்லாந்து மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்லாந்து பிரதமரின் இந்த நடவடிக்கையை இந்தியர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்