கர்தார்பூர் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள கர்தார்பூர் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கர்தார்பூர் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x
சீக்கிய குருவான குரு நானக்கின் நினைவிடம் பஞ்சாப் எல்லையையொட்டி பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ளது. இங்கு சீக்கியர்கள் சென்று வர வசதியாக இரு நாடுகளுக்கு இடையே 4 புள்ளி 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு இரு நாடுகளும் சாலை அமைத்துள்ளன.  இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருநானக் குருத்வாரா வரை இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பிரதமர் மோடி  திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவின் உணர்வுகளை மதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்