ஈராக் : அரசை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்
ஈராக்கில் அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முடி திருத்துபவர்களும், இசை கலைஞர்களும் பங்கேற்றனர்.
ஈராக்கில் அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முடி திருத்துபவர்களும், இசை கலைஞர்களும் பங்கேற்றனர். ஈரோக்கில் அரசு நிர்வாகத்தை கண்டித்து கடந்த ஒன்றரை மாதமாக அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதத்தில் மட்டும் 250 இளைஞர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் பாக்தாத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக அங்குள்ள முடி திருத்துபவர்கள் ஒன்றிணைந்து, போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு இலவசமாக முடி வெட்டினர். மேலும், அங்குள்ள இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து பாடல்கள் பாடி இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்தனர்.
Next Story