இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு

இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு- உணவில் விஷம் கலந்திருக்கலாம் என போலீஸ் தகவல்
இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு
x
இலங்கை , பொலன்னறுவை மாவட்டம் தும்பிக்குளம் வனப்பகுதியில் மர்மமான முறையில் 7 பெண் யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் முதலில் 4 யானைகளின் உடல்களும் பின்னர் மேலும் 3 யானைகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. யானைகள் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த வனத்துறையினர், யானைகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என கூறினர்.வேறு யானைகள் ஏதேனும் உயிரிழந்துள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்