இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு
இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு- உணவில் விஷம் கலந்திருக்கலாம் என போலீஸ் தகவல்
இலங்கை , பொலன்னறுவை மாவட்டம் தும்பிக்குளம் வனப்பகுதியில் மர்மமான முறையில் 7 பெண் யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் முதலில் 4 யானைகளின் உடல்களும் பின்னர் மேலும் 3 யானைகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. யானைகள் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த வனத்துறையினர், யானைகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என கூறினர்.வேறு யானைகள் ஏதேனும் உயிரிழந்துள்ளதா என்பதை அறிய வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
Next Story