"காஷ்மீர் விவகாரம் - சமரசம் செய்ய தயார்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் - சமரசம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு
x
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நியூயார்க் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே மிக நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சினை  உள்ளதாகவும் அது மிகவும் சிக்கலான விவகாரம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் என்றும் அப்போது கூறினார். காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சு நடத்த தயார் என டிரம்ப் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கருத்தை இம்ரான்கான் சந்திப்பின்போது கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்