கர்தார்பூர் வழித்தட திட்டம் : இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

குருநானக் கடைசியாக வாழ்ந்த, பாகிஸ்தானில் உள்ள இடத்தில் கட்டப்பட்ட குருத்வாரா தர்பார் சாஹிப்-க்கு செல்வது சீக்கியர்கள் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.
கர்தார்பூர் வழித்தட திட்டம் : இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
குருநானக் கடைசியாக வாழ்ந்த, பாகிஸ்தானில் உள்ள இடத்தில் கட்டப்பட்ட குருத்வாரா தர்பார் சாஹிப்-க்கு செல்வது சீக்கியர்கள் முக்கிய கடமையாக கருதப்படுகிறது. இந்நிலையில் விசா இல்லாமல் எளிதாக அங்கு செல்லும் வகையில், கர்தார்பூர் வழித்தட திட்டம் உருவாக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. கர்தார்பூர் வழித்தட நடைமுறைகள் குறித்து இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அட்டாரி வாகா எல்லையில், பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறுகிறது. இதில் யாத்ரீகர்களின் பயணம், யாத்திரை செல்லும் நபர்களின் பாதுகாப்பு, எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்