சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் மக்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள்.
சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - பிரதமர் இம்ரான்கான்
x
பாகிஸ்தான் மக்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி மூலம் இம்ரான்கான்  உரையாற்றினார். பாகிஸ்தானை சிறப்பான நாடாக மாற்ற விரும்பினால் அந்நாட்டு மக்கள் தங்களது அனைத்து சொத்து விவரங்களையும் தெரிவித்து  உரிய வரியை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். தவறினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த இம்ரான்கான் பாகிஸ்தானின் கடன் சுமை 30 லட்சம் கோடி 
ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்