தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அரசிடம் விருது பெற்றவர் என அதிர்ச்சி தகவல்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில், தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான இன்ஷாஃப் இப்ராஹிம், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உயரிய விருது பெற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில், தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான இன்ஷாஃப் இப்ராஹிம், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உயரிய விருது பெற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்ஷாஃப் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விருது, அப்போதையை அமைச்சராக இருந்த சுஜீவ சேனசிங்காவால் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரவி வருகிறது. வீடியோவில் இன்ஷாஃபின் தந்தை இப்ராஹிம் விருதை பெற்றுக்கொள்வதும், இன்ஷாஃப் அருகில் நிற்பதும் பதிவாகியுள்ளது.
Next Story