இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி
தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்து இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் இருப்பதாக கடந்த வாரத்தில் தகவல்கள் வெளியாகின.நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் இந்தியா கேட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்து நீதிமன்றம் அளித்த பிடிவாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இந்திய அமலாக்கத்துறை மற்றும் புலனாய்வுத் துறை தொடர்ந்த வழக்குகள் அடிப்படையில், அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story