அமைதிக்கான நோபல் பரிசு இம்ரான்கானிற்கு அளிக்கலாம் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இம்ரான்கானிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்ரான்கானிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையை பக்குவமாக கையாண்டுள்ளார் என்றும் , இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து அமைதியை ஏற்படுத்திய இம்ரான்கானின் பங்களிப்பிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது ..
Next Story