புல்வாமா தாக்குதல் : "இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை மோசம்" - டிரம்ப் கருத்து

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை மோசம் - டிரம்ப் கருத்து
x
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு நாடுகளுடனும்  அமெரிக்கா தொடர்பு கொண்டு ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். பாகிஸ்தானுக்கு 1 புள்ளி 3 பில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்த தாம் உத்தரவிட்டதை குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், அமெரிக்காவுடன் அண்மை காலமாக பாகிஸ்தான் நட்புறவை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்