பூங்காவில் பைக்குள் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : கடும் குளிரில் குழந்தையை கைவிட்டுச் சென்றது யார்?

இங்கிலாந்தில் உள்ள பூங்காவில், பைக்குள் இருந்து பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
பூங்காவில் பைக்குள் பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு : கடும் குளிரில் குழந்தையை கைவிட்டுச் சென்றது யார்?
x
இங்கிலாந்தில் உள்ள பூங்காவில்,  பைக்குள்  இருந்து பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள பூங்காவில், நேற்று இரவு பத்து மணியளவில் தனது நாயுடன் வாக்கிங் சென்ற நபர், பைக்குள் குழந்தையின் அழும் சத்தம் கேட்டு, அருகே சென்றார். இதில் துண்டு போர்த்தப்பட்ட நிலையில், பச்சிளம் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. தகவறிந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடும் குளிரில் இரக்கமின்றி குழந்தையை கைவிட்டுச் சென்று யார் என்பது குறித்து,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்