இத்தாலியில் கடும் பனிப்புயல்...

இத்தாலியில் கடும் பனிப்புயல் காரணமாக அங்குள்ள அபெநைன் மலை கிராமத்தில் பல இடங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை போலவே பூனைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன.
இத்தாலியில் கடும் பனிப்புயல்...
x
இத்தாலியில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அபெநைன் மலை கிராமத்தில் பல இடங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை போலவே பூனைகளும் செய்வதறியாது திகைத்துள்ளன. தூங்கி விழிக்கும் பூனைகள் அங்கு படர்ந்துள்ள பனி மீது ஏறி, அதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. அங்குள்ள சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.  வீட்டு கூரைகள் மீதும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீதும் பனி அதிகளவில் படர்ந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்