ராமேஸ்வரம் மீனவர்களுக்கு டிச.14 ந்தேதி வரை சிறை : இலங்கை நீதிமன்றம்

நடுகடலில் படகு முழ்கி தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு டிச.14 ந்தேதி வரை சிறை :  இலங்கை நீதிமன்றம்
x
கடந்த புதன் கிழமை இரவு வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான படகு, நான்கு மீனவர்களுடன் நடுகடலில் மூழ்கியது. இதனையடுத்து, கடலில் மூழ்கிய மீனவர்களை, மீட்ட இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை போலீசாரிடம், ஒப்படைத்தனர். இந்த மீனவர்கள், இன்று மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் நால்வரையும் வரும் டிசம்பர் மாதம் 14ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்திரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்