இலங்கை அரசியலில் அடுத்த திருப்பம் : சுதந்திரா கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே

இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக, சுதந்திரா கட்சியில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே விலகி உள்ளார்.
இலங்கை அரசியலில் அடுத்த திருப்பம் : சுதந்திரா கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே
x
* இலங்கையில் திடீரென விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.  இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை  திடீரென கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5ம்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்நிலையில், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே, இலங்கையின்  பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.

* கடந்த தேர்தலைப்போல் இந்த முறையும் ஐக்கிய மக்கள் முன்னணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சிறிசேன தரப்பும், பொதுஜன பெரமுன-வின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ராஜபக்சே தரப்பும் கூறிவந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து ராஜபக்சேவெளியேறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்