இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி

"216-ல்,209 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது"
இலங்கையில் மனித புதைகுழி அகழ்வு பணி
x
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் மனித புதைகுழி அகழ்வு பணியானது 100 வது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்ட நீதிபதி சரவணராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது நடைபெற்று வருகிறது. இதுவரையான அகழ்வு பணிகளின் முடிவின் படி 216 க்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 209 அதிகமான மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்