விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் கைது

இலங்கையில் விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளை பாராட்டி கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் கைது
x
இலங்கையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப்புலிகளை பாராட்டி சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், திடீரென இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்ததாக காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விசாரணைக்கு வருமாறு விஜயகலாவை அழைத்திருந்த நிலையில், வாக்குமூலம் பெறும்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் குணசேகர கூறினார். கைதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயகலாவை, புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்