இந்தோனேசிய சிறைகளில் இருந்து, 1,200 குற்றவாளிகள் தப்பியதாக தகவல்...

நில நடுக்கம், சுனாமியால் இடிந்த இந்தோனேசிய சிறைகளில் இருந்து, ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.
இந்தோனேசிய சிறைகளில் இருந்து, 1,200 குற்றவாளிகள் தப்பியதாக தகவல்...
x
நில நடுக்கம், சுனாமியால் இடிந்த இந்தோனேசிய சிறைகளில் இருந்து, ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று, 7 புள்ளி 5 ரிக்டர் அளவிலான நில நடுக்கமும், 170 முறை நில அதிர்வும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி தாக்கியது.    இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது பலு மற்றும் டோங்கலா சிறைகளின் சுற்றுச்சுவர் இடிந்ததால், சிறைகளில் இருந்து ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.   நிலநடுக்கம், சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் நிலை அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்