பிரிட்டிஷ் ஏர்வேஸ் 3.80 லட்சம் பயணிகள் விவரம் திருட்டு

ஆகஸ்டு 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பிரிட்டிஷ் விமான சேவையை பயன்படுத்திய 3 லட்சத்து 80 ஆயிரம் பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் 3.80 லட்சம் பயணிகள் விவரம் திருட்டு
x
ஆகஸ்டு 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை, பிரிட்டிஷ் விமான சேவையை பயன்படுத்திய  3 லட்சத்து 80 ஆயிரம் பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்கள் நீடித்த ஹேக்கிங்கில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வாடிக்கையாளர்களின் பயண விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக விரைவில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வோம் எனவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்