அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போலீஸ் அதிகாரி : குவியும் பாராட்டுகள்
அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி Celeste Jaqueline Ayala என்பவர், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்று மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த குழந்தை பசியால் அழுதது. யாரும் அதை கவனிக்கவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்தக் குழந்தையை தூக்கி தாய்ப்பால் கொடுத்தார். இந்த விவகாரம் அர்ஜென்டினாவின் துணை அதிபருக்கு, தெரிய வந்தது. உடனே அவர், செலஸ்டீயை அழைத்து பாராட்டி, பதவி உயர்வு கொடுத்துள்ளார்.
Next Story