இன்று உலக யானை தினம்...

உலக யானை தினமான இன்று, தனது தோற்றத்தால் பிரம்மிப்பூட்டும் யானைகள், மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்களுக்கென்று தனி இடத்தை நிலை நிறுத்தியுள்ளதை குறித்து பார்க்கலாம்...
இன்று உலக யானை தினம்...
x
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பதில் யானைகளுக்கு ஈடு வேறு எதுவும் கிடையாது. மனிதர்களின் உணர்வுகளை எளிதில் உணர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகக்கூடிவை இவை, பண்டைய காலம் முதல் மனிதர்களின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்களுக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளன. 

கேரளாவில் யானைகளின் அணிவகுப்பு  கோவில் சம்பிரதாயங்களில்  இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. யானைகள் இல்லாவிட்டால் திருவிழாக்களே இல்லையென்கிற அளவிற்கு யானைகள் கோவில் திருவிழாக்களின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன.

அதுவும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் பாராட்டை பெற்ற கேரளாவின் திருச்சூர் பூரம் உலக பிரசித்தி பெற்றது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதர் சிவன் கோயிலில் ஆடி மாதம் தோறும்  திரளான யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தி வைக்கப்படும் அணிவகுப்பு இடம்பெறுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி இங்கு நடத்தப்படும் "யானையூட்டு விழாவில், யானைகளுக்கு உணவளித்து மகிழ்கின்றனர், பக்தர்கள்.

யானையை தேசிய விலங்காக கொண்டுள்ள தாய்லாந்தில் யானைகள் கொண்டு நடத்தப்படும் தண்ணீர் திருவிழாவை காண ஆண்டுதோறும் குவிகின்றனர், சுற்றுலா பயணிகள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பல வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட  யானைகள் மீது நீரை வாரியிறைக்கின்றன. 

பதிலுக்கு யானைகளும் தங்கள் தும்பிக்கையால் மக்கள் கூட்டத்தின் மீது நீரை பீய்ச்சியடிக்கும். இந்த தண்ணீர் திருவிழா வாழ்வில் செழிப்பை ஏற்படுத்துவதாக நம்புகின்றனர், தாய்லாந்து மக்கள் இது போன்ற திருவிழாக்கள் தென்கிழக்காசிய நாடுகளான மியன்மார், கம்போடியாவிலும் கொண்டாடப்படுகின்றன. 

மன்னர் பெயர் சூட்டப்பட்டு விளையாடப்படும் "யானை போலோ" யானைகளுடனான தொடர்பை வெளிபடுத்தும் இன்னொரு விளையாட்டாகும்.தாய்லாந்தில் யானைகள் மீது அமர்ந்தவாறு களமிறங்கி பந்துகளை நகர்த்தி விளையாடப்படும் இந்த விளையாட்டிற்கென ரசிகர்கள் ஏராளம். 

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்படும் யானை திருவிழாவில், அணிவகுப்பு , ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் என பல்வேறு வகையான போட்டிகளில்  பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன, யானைகள் இலங்கை மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய  நாடுகளிலும் ஆண்டுதோறும் யானைகளுக்கான திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. 

மனித கலாச்சாரத்தில் ஒன்றிணைந்த யானைகளை பல இடங்களில் தெய்வமாகவே வணங்குகின்றனர். யானைகளை பொறுத்த வரையில் தனது உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்த்து வருத்தப்பட கூடியது. யானைகளை துன்புறுத்தாமல் அவற்றை தொடர்ந்து மனித இனம் உணர்வுபூர்வமாக கொண்டாடினால் மனிதனுக்கு உற்ற நண்பனாக அவை திகழ்வது நிச்சயம்.

Next Story

மேலும் செய்திகள்