தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன ?

மீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை - நடந்தது என்ன ?
x
* தாய்லாந்தில் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 வீரர்களும் அவர்களின் பயிற்சியாளரும்  சியாங் ராய் என்னும் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

* கடந்த ஜூன் 23-ம் தேதி,  அங்கு இருந்த 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாம் லுவாங் குகையை nபார்வையிடுவதற்காக உள்ளே சென்றனர். அப்போது  திடீரென பெய்த  பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் குகைக்குள் வெள்ளநீரும், சகதியும் புகுந்தது.

* அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் 13 பேரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். 

* இதனிடையே கால்பந்து அணியை சேர்ந்த 13 பேர் காணாமல் போன தகவல் தாய்லாந்து முழுவதும் பரவியது.

* இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழு, குகை வாயிலில் இருந்த மிதிவண்டிகள் உள்ளிட்ட பொருள்களை வைத்து குகைக்குள் 13 பேரும் சிக்கியதை உறுதி செய்தனர். 

* தொடர்  கன மழை மற்றும் மோசமான வா​னிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இந்தத் தகவல் தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

* குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று தாய்லாந்து முழுவதும் பிரார்த்தனைகள்  நடைபெற்றன.

* இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகைக்குள் பாறை மேடு ஒன்றில் 13 பேரும் அமர்ந்திருப்பதை கண்டறிந்தார். பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்று காணப்பட்ட நிலையில் அவர்கள் பேசிய வீடியோ வெளியானது.

* இதையடுத்து மீட்பு பணியில் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற மீட்பு படை களம் இறங்கியது.

* அதன் தொடர்ச்சியாக, குகைக்குள் சிக்கியவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப்  பொருள்கள் அனுப்பப்பட்டன. 

* குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என மீட்புக் குழு தெரிவித்தது.  எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது.

* இந்த நிலையில், அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் தயாரான பிறகு, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த நிலையில் பன்னாட்டு மீட்புக் குழுவினரும் பணியில் இணைந்து கொண்ட நிலையில் குகைக்குள் சிக்கியிருந்த  13 பேரில், 4 சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

* மீட்புப் பணி எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* குகைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடர்ந்த நிலையில்,மேலும் 4 சிறுவர்கள், குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வரப்பட்டனர்.

* இந்நிலையில் செவ்வாய் கிழமையன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இறுதியாக குகைக்குள் சிக்கி இருந்த ஒரே ஒரு சிறுவனும், பயிற்சியாளரும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.

* சிறுவர்கள் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டது தாய்லாந்து மட்டுமின்றி  உலகம் முழுவதுமே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்