மே 6-ஆம் தேதி நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு

x

மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது...

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து இத்தேர்வினை 13 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடித்துள்ள மாணவர்களுக்காக பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக எழும்பூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வகுப்பில் சுமார் 60 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் பயனுள்ள வகையில் இருப்பதாக மாணவர்கள் தெரிவிதுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்