பழைய சைக்கிளில் போலீஸ் நடத்திய மேஜிக் - வியந்து பார்க்கும் பொதுமக்கள்

x

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில், சைக்கிளை பயன்படுத்தி கதவு அமைக்கப்பட்ட முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. காவல்நிலைய தோட்டத்தை பாதுகாக்க கம்பி வேலி போடப்பட்ட நிலையில், அங்கு கேட்பாரற்று இருந்த வாகனங்களை பயன்படுத்தி கதவு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சைக்கிள் ஒன்றை இரும்பு சட்டத்தில் பொருத்தி கதவாக அதற்கு மறுவாழ்வளித்தனர். இடைவெளி உள்ள பகுதிகளில் கேரியர், பெல் போன்ற இதர பொருட்களை பொருத்தி அசத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்