அகங்காரமாக சொன்ன இன்சூரன்ஸ் நிறுவனம் - கோர்ட் படியேறிய Ex அரசு ஊழியர்.. 6% வட்டியுடன் தர தீர்ப்பு.

x

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் சிகிச்சைக்கு காப்பீட்டுத் தொகை தர மறுத்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்திற்கு, சிகிச்சைக்கான தொகையுடன் சேர்த்து 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் உடல்நலக்குறைவுக்காக, மகாலிங்கம் என்பவர் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார். செலவு குறித்த இரசீதுகளை அனுப்பிய நிலையில், அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி காப்பீட்டு நிறுவனம் பணம் தர மறுத்துள்ளது. மகாலிங்கம் நுகர்வோர் நீதிமன்றம் சென்ற நிலையில், சிகிச்சைக்கான செலவை 6 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்