பாஜக நிர்வாகியை தாக்கிய அதிமுக ஊராட்சி தலைவர் - தாராபுரம் அருகே பரபரப்பு

x

திருப்பூர் அருகே, டெண்டர் விடும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், பாஜக நிர்வாகியை தாக்கியதாக, அதிமுக ஊராட்சி தலைவர் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சியை சேர்ந்த பாஜக நிர்வாகி யோகிஸ்வரன் என்பவர், கழிவுநீர் கால்வாய், குடிநீர் மேல்நிலை தொட்டியை அமைப்பதற்கான டெண்டர் மனுவை விண்ணப்பத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் குப்புசாமி, அதிமுக துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் யோகிஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த யோகிஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமறைவான குப்புசாமி மற்றும் செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்