குலதெய்வக் கோவிலில் அன்னதானம் வழங்கிய நடிகை ரோஜா

x

குலதெய்வக் கோவிலில் அன்னதானம் வழங்கிய நடிகை ரோஜா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, தனது கணவருடன் குலதெய்வக் கோவிலில் வழிபாடு செய்தார்.

திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. அவரின் மனைவியான நடிகை ரோஜா, ஆந்திர அமைச்சரானதை தொடர்ந்து, தங்களது குடும்பத்தின் குல தெய்வ கோவிலான செல்லியம்மன் கோவிலில் பொங்கலிட்டு படைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கினார்.

மேலும் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று நடிகை ரோஜா, தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்