தமிழகத்தில் இடியுடன் கொட்டி தீர்த்த கனமழை
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஐந்துரோடு, சூரமங்கலம் எஸ், கொல்லப்பட்டி, ரெட்டிப்பட்டி, ஏற்காடு அடிவாரம் ஆகிய பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஐந்துரோடு, சூரமங்கலம் எஸ், கொல்லப்பட்டி, ரெட்டிப்பட்டி, ஏற்காடு அடிவாரம் ஆகிய பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து மாலை 4 மணியளவில் ஒருசில இடங்களிலும் மாலை 6 மணியிலிருந்து 8 மணியளவில் ஒரு சில இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story