விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசங்கள் திருட்டு... வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மிகவும் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கலசங்கள் திருடப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
x
மிகவும் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கலசங்கள் திருடப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 28ம் தேதி, விருத்தகிரீஸ்வரர் கோவில் கலசங்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து குற்றவாளியான சந்தோஷ்குமார் என்பவர் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இருசக்கர வாகனத்தில் கலசங்களை சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்